திரு திரு திரு பாகம் இரண்டு
நாங்கள் பேசிக்கொண்டு வந்த jargan(அலுவலகத்திர்க்கு உள்ளே பயன்படுத்தப்படும் வார்த்தைகள்) தோரணையைக் கொண்டு அந்தப் பெண் நாங்களும் அவருடைய அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என மிக நீண்ட நேரம் கவனித்து வந்திருக்கின்றார். அந்த பெண்ணின் ஊர் பலமனேர். ஆந்திரா வட்டாரம். நீண்ட நேரம் பேசிக்கொண்டு வந்தோம். வழியில் ஒரு சிற்றுண்டியில் பேருந்து நின்றது. இயற்கை அழைப்பை முடித்துக்கொண்டு ஒரு தேநீர் கோப்பையுடன் பேருந்து பயணம் தொடர்ந்தது. வழியிலேயே அந்த பெண் இறங்கிவிட்டார். பேரைக் கேட்காமல் விட்டோமே என பின்னர் உரைத்தது. சித்தூர் வந்தடைந்தோம். பத்ரி தெலுங்கு தாய் மொழிக் கொண்டவர் என்பதால் எனக்கு சிரமமில்லாமல் இருந்தது. பேருந்து நிலையத்திலேயே உணவருந்திவிட்டு திருப்பதி செல்லும் பேருந்தில் அமர்ந்தோம். ஒரு மணி முப்பது நிமிடங்களில் திருப்பதியைச் சென்றடைந்தோம். இரவு பத்து மணி. தரிசனத்தை சீக்கிரம் முடிப்பதற்கு எளிய வழி மலையின் கீழிருந்து நடந்து சென்றால் அவர்களுக்கு சிறப்பு சலுகையில் (எந்த கட்டணமும் இல்லாமல்) மூன்று மணி நேரத்தில் தரிசித்து வரலாம் என பத்ரி கூறினார். அவ்வாறு கீ