ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 2
பொதுவாகவே கர்நாடகா பேருந்துகள் சற்று விசாலமாக இருக்கும். ஏறுவதற்கான வழி மட்டும் தான் ஒரு வழி பாதை. ஆனால் மூன்று பேர் அமரும் சீட்டு நன்று விசாலமாக இருக்கும். நானும், பத்ரியும் மூன்று பேர் அமரும் சீட்டில் அமர்ந்து கொண்டோம். பெங்களூரில் இருந்து ஷிமொகாவிர்க்கு ஆறரை மணி நேர பயணம். பேருந்து கிளம்பும் போது அவ்வளவாக கூட்டம் இல்லை. இருவரும் அலுவலக அரசியல், புது அலுவலக மாறுதல், பழமை, புதுமை, என பேசிக்கொண்டு பயணத்தை ஆரம்பித்தோம். சொல்ல மறந்துவிட்டேன். பெங்களூர் டு ஷிமோகா ஒருவற்கு 135/- ருபாய். போகும் வழியில் கூட்டம் நிரம்பிக்கொண்டு வழிந்தது. பயணி ஒருவர் நடத்துனரை திட்டிக்கொண்டு வந்தார். நடத்துனர் அதிகமாக மக்களை ஏற்றிக்கொண்டு இருந்தார். மனுஷன் சும்மா தாளிச்சி எடுத்துட்டார் நடத்துனரை. அவர் நமது சீட்டு அருகில் தான் பயணித்து வந்தார். பத்ரி அவரிடம் சிறிது பேசிக்கொண்டு வந்தார். பேருந்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நல்லவேளை அரசு பேருந்தில் பாடல்களோ, படமோ ஒளிபரப்ப வில்லை. பொதுவாக பேருந்தில் ஒலிக்க விடும் பாடல்கள் கடுப்பை ஏற்படுத்தும். எனக்கு எப்போதும் வெளியில் வேடிக்கை பார்த்துகொண்ட