Posts

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4

Image
ஒரு வழியாக ஜோக் falls சென்றடைந்தோம். எங்களை வரவேற்பதற்காக தாரை, தப்பட்டையுடன் வரவேற்பது போல், பேரிற்கு தகுந்தபடி ஜோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ வென மழை பெய்தது... பத்ரி பேருந்தின் படியிலேயே மழையில் போக முடியாமல் நின்று கொண்டார். நான் குடை எடுத்து வந்திருந்தேன். நுழைவாயில் கட்டணமாக இரண்டு பேருக்கு பத்து ருபாய். குடை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றோம். இயற்கை உபாதைகள் முடித்துக்கொண்டு வரும் வழியில் கிளிக்கியது.......... ஜோக் பால்ல்சின் இரைச்சல் காதிற்கு எட்டியது......மிக ஆவலாக தலையை சிறிது எட்டி பார்த்தேன்..... .........ஆஆஹாஆஆஆஆஆஆ .... அற்புதம்.......... காண கண் கோடி வேண்டும்.......... பூமியில் இருக்கும் ஒரு சொர்க்கம்.............ஜோக் falls பார்க்க எத்தனை நாட்கள் தவமிருந்திருகிறேன் .......இதோ என் கண் முன்னால் விரிய போகும் அதிசயம்........... பனி சூழ்ந்துள்ள அந்த இடத்தில் சலனம் இல்லாமல், ஆர்பாட்டம் அதிகமில்லாமல் வழிந்தோடியது........... மனம் இந்த இடத்தை விட்டு போக விரும்ப இல்லை. இங்கையே தங்கி விட நினைத்தது.... மழையும்,

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 3

Image
காலை ஆறு மணிக்கு பத்ரியை அலாரம் வைக்க சொல்லியிருந்தேன். என்னை எழுப்பி விட்டுட்டு அவர் தூங்கிக்கொண்டிருந்தார். குளியலறையில் சுடு தண்ணீர் வரவில்லை. நல்ல குளிர். பாவிகளா ஏமாற்றி விட்டார்களே என எண்ணி கீழே போய் வரவேற்பாளரிடம் கேட்டேன். அவர் ஆறுமணிக்கே "நாங்கள் சுடுதண்ணீர் போட்டு விட்டோம்", என்றார்... சரி பத்ரியை முதலில் குளிக்க அனுப்பி விட்டு பிறகு சிறிது நேரம் கழித்து நாம் குளிப்போம், அப்போது சுடு தண்ணீர் வரும் என எண்ணினேன். நம்பிக்கை வீண் போக வில்லை. பிறகு குளித்து விட்டு, செக் அவுட் செய்தோம். வரவேற்பாளரிடம் விசாரித்தோம்.  சிகன்தூர் சௌடேஸ்வரி கோவில் மற்றும் ஜோக் நீர்வீழ்ச்சி  ஒரே நாளில் பார்க்க முடிமா என்று. அவர் பார்க்க முடியும் என்றார். இருந்தாலும் மனதில் ஒரு குழப்பம். காரணம். பயண தூரங்கள் தான்.  சிகன்தூர் சௌடேஸ்வரி கோவில் செல்வது என்றால் நமக்கு நேரம் குறைவு. காரணம், அந்த கோவிலுக்கு செல்வது என்றால் சாலை பயணம் செய்து, பிறகு ஒரு பெரிய ஆற்றை கடந்து போக வேண்டும். ஆற்றை கடக்க ஒரு படகு பயணம் செய்ய வேண்டும். இந்த இரண்டு பயணங்களை முடித்து அதற்குப்பின் ஜோக் செல்வது என்றால் கால தாமதம

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 2

Image
பொதுவாகவே கர்நாடகா பேருந்துகள் சற்று விசாலமாக இருக்கும். ஏறுவதற்கான வழி மட்டும் தான் ஒரு வழி பாதை. ஆனால் மூன்று பேர் அமரும் சீட்டு நன்று விசாலமாக இருக்கும். நானும், பத்ரியும் மூன்று பேர் அமரும் சீட்டில் அமர்ந்து கொண்டோம். பெங்களூரில் இருந்து ஷிமொகாவிர்க்கு ஆறரை மணி நேர பயணம். பேருந்து கிளம்பும் போது அவ்வளவாக கூட்டம் இல்லை. இருவரும் அலுவலக அரசியல், புது அலுவலக மாறுதல், பழமை, புதுமை, என பேசிக்கொண்டு பயணத்தை ஆரம்பித்தோம். சொல்ல மறந்துவிட்டேன். பெங்களூர் டு ஷிமோகா ஒருவற்கு 135/- ருபாய்.  போகும் வழியில் கூட்டம் நிரம்பிக்கொண்டு வழிந்தது. பயணி ஒருவர் நடத்துனரை திட்டிக்கொண்டு வந்தார். நடத்துனர் அதிகமாக மக்களை ஏற்றிக்கொண்டு இருந்தார். மனுஷன் சும்மா தாளிச்சி எடுத்துட்டார் நடத்துனரை.  அவர் நமது சீட்டு அருகில் தான் பயணித்து வந்தார். பத்ரி அவரிடம் சிறிது பேசிக்கொண்டு வந்தார். பேருந்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நல்லவேளை அரசு பேருந்தில் பாடல்களோ, படமோ ஒளிபரப்ப வில்லை. பொதுவாக பேருந்தில் ஒலிக்க விடும் பாடல்கள் கடுப்பை ஏற்படுத்தும். எனக்கு எப்போதும் வெளியில் வேடிக்கை பார்த்துகொண்ட

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 1

Jog Falls (ஜோக் நீர்வீழ்ச்சி). ஆசியாவிலேயே மிக உயரமான நீவீழ்ச்சிகளில் ஒன்றாகும். திரைப்படங்களில் கண்டிப்பாக இந்த நீர்வீழ்ச்சி ஒரு பிரதான காட்சியாக வைப்பார்கள். ஜோக் falls செல்வதற்கு முதலில் தேர்ந்தெடுத்தது  KSRDC Tour Package தான். இந்த பயண தொகுப்பில் அவர்கள் மூன்று இடங்களை கவர் செய்கிறார்கள். 1). ஜோக் falls. 2). சிகன்தூர் சௌடேஸ்வரி கோவில். 3). லிங்கனமக்கி dam. வெள்ளி இரவு சென்று அடுத்த நாள் பெங்களூர் வந்தடைவார்கள். ஒருவர்க்கு ருபாய் 1810/. Bachelor's trip, பட்ஜெட் தாங்காது என்று தனியாக செல்லலாம் என தீர்மானித்தோம். 1810 ரூபாயில் அவர்கள் பயணக்கட்டணம், வாயில் கட்டணம் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். மற்றவை உணவு எல்லாம் நம்முடைய செலவுகள். அவர்கள் எங்கும் தங்குவதில்லை. வெள்ளி இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஷிமோகாவில் காலை கர்நாடகா சுற்றுலா தங்கும் விடுதியில் குளிக்க, புத்துணர்ச்சி செய்துகொண்டு கிளம்ப ஏற்பாடு செய்து கொடுத்து விடுகிறார்கள்.. சரி நாம் தனியாக செல்வதனால் வெள்ளி இரவு ஷிமோகாவில் தங்கி ஓய்வு எடுத்துகொண்டு சென்றால் தான் நன்று என எண்ணி, நெட்டில் தேடுகையில்