தஞ்சைப் பெரிய கோவில் பகுதி 1
சமீபத்தில் தஞ்சைப் பெரிய கோவில் காணும் வாய்ப்புக்கிட்டியது. கூகுளார் துணை இருக்கும் போது என்னத்த புதுசா எழுத முடியும்? அது தான் எல்லாத்தகவலும் கொட்டிக்கிடக்குதே! என நானும் உங்களைப் போன்று எண்ணினேன். எனக்குப் பகிர விருப்பமானது தஞ்சைப் பெரிய கோவிலைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றும் உணர்வுகளைத் தங்களுடன் பகிர வேண்டும் என்பதே... அவ்வளவே..... அது என்னமோ தெரியவில்லை. தஞ்சைப் பெரியக்கோவிலைக் காணும் வாய்ப்பு எப்போதும் உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் மதிய நேரமாகவே வாய்த்துவிடுகிறது. கோவிலின் நடை, மாலை நான்கு மணிக்குத் தான் திறப்பார்கள் என கூறினார்கள். அது வரை என்ன செய்வது? உள்ளே செல்லாமல் உள் சுற்று வட்டாரத்தில் அரசு நடத்தும் தஞ்சாவூர் பொம்மைக் கடையின் வெளியில் அமர்ந்துக் கொண்டோம். ஒட்காருவதர்க்கு ஏதுவாக நல்ல திண்ணைகளை அமைத்திருந்தார்கள். விலை சற்று அதிகமாக வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கு நேர் எதிரில் ஒரு வெளிநாட்டவர் ஒட்கார்ந்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தார். (UNESCO) கோவில்கள் அனைத்திலும் யாராவது ஒரு வெளிநாட்டவரைத் தவறாது பார்த்துவிடலாம். அப்படி இப்படி