ஐரா - பாகம் ஒன்று
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பதிவு இட்டு மாதக் கணக்காகிவிட்டது. இந்த பதிவின் மூலம் நானும் ஆட்டத்துல இருக்கேன்னு சொல்லிக்கறேன். ஐராவதீஸ்வரர் கோவில். சிற்பங்களுக்கெல்லாம் கடவுள் என இந்தக் கோவிலை தாராளமாகக் கூறலாம். கும்பகோணத்தில் இருந்து ஒரு மணி நேர பயணமாக தாராசுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது இந்த ஐராவதீஸ்வரர் கோவில். பழைய பதிவில் கூறியது போல் விக்கிபீடியாவில் அனைத்து தகவலும் உள்ளது. எனக்கு ஏற்பட்ட நினைவுகளை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கோவில் UNESCOவின் பராமரிப்பிர்க்குக் கீழ் வருகிறது. கோவிலை சுற்றி உள்ள தோட்டத்தின் பராமரிப்பு முறையைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளமுடிகிறது. பொதுவாகவே கும்பகோணம் ஊரின் சுற்று வட்டாரம் முழுவதும் கோவில்களால் நிரம்பி வழிகிறது. ஆனால் இந்த ஐராவதீஸ்வரர் கோவில் மட்டும் தனித்துவம் வாய்ந்தது. காரணம் இந்த கோவில் இராஜ இராஜ சோழனால் கட்டப்பெற்றது. கோவிலின் வெளியில் இருந்துப் பார்க்கும்போது இந்த கோவிலின் சிறப்பு அவ்வளவு சிறப்பாகவா இருக்குமா என்ன? என எண்ணத்தோன்றும்